Paristamil Navigation Paristamil advert login

ரஸ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு

ரஸ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு

19 புரட்டாசி 2025 வெள்ளி 11:12 | பார்வைகள் : 2905


ரஸ்யாவில் 19.09.2025 அதிகாலை மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

 

7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

 

கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 சுமார் கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த நில அதிர்வால் அந்தப் பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.