Paristamil Navigation Paristamil advert login

இரத்தாகும் எயார்பிரான்ஸ் சேவைகள்!

இரத்தாகும் எயார்பிரான்ஸ் சேவைகள்!

1 பங்குனி 2026 ஞாயிறு 18:02 | பார்வைகள் : 3001


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சனிக்கிழமை ஈரானில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. அதற்கு பதிடூலடியாக ஈரான் வளைகுடாப் பிராந்தியத்தில் பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பல தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் பதிவாகியுள்ளதால், நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் எழுந்துள்ளது.

வான்பரப்பில் ஏவுகணைத் தாக்குதல் அபாயங்களும் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக எயார்பிரான்ஸ் நிறுவனம் தெல்‑அவீவ், பெய்ரூத், துபாய் மற்றும் ரியாத் ஆகிய இடங்களுக்கு செல்லும், மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகளை செவ்வாய்க்கிழமை வரை இடை நிறுத்தியுள்ளது.

நிலைமை மேலும் மோசமடைந்தால் இந்நிலை தொடரும் எனவும் மேலும் பல இடங்களிற்கான பறப்புகளும் இரத்துச் செய்யப்படலாம் எனவும் எயார்பிரான்ஸ் தெரவித்துள்ளது.