Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மீதான போர் - ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்

ஈரான் மீதான போர் - ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்

29 பங்குனி 2026 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 1569


ஈரான் மீதான போர் உட்பட, டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிகள், அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடத்தப்படும் மிகப்பெரிய போராட்டமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின்  50 மாநிலங்களிலும் 3,200 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மற்றும் பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும்
போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இப்சோஸ் (Ipsos) கருத்துக் கணிப்பின்படி, தற்போது டொனால்ட் ட்ரம்பிற்கான ஆதரவு விகிதம் 36% ஆகக் குறைந்துள்ளது.