Paristamil Navigation Paristamil advert login

துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

4 பங்குனி 2026 புதன் 14:25 | பார்வைகள் : 1964


சவூதி அரேபியா, குவைத்தைத் தொடர்ந்து துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தூதரகக் கட்டடம் தீப்பிடித்து, அதிலிருந்து கருப்பு புகை வெளிக்கிளம்பிய நிலையில், உடனடியாக தீயணைப்பு படையினர் அத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து, அனைத்து தூதரக ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.