லெபனானுக்கு உதவி - சாள்-து-கோல் கப்பலில் மக்ரோன்! - மத்திய கிழக்கு கள நிலவரம்!!
9 பங்குனி 2026 திங்கள் 15:29 | பார்வைகள் : 3561
மத்திய கிழக்கில் இன்று பத்தாவது நாளாக யுத்தம் இடம்பெற்று வருகிறது. இன்று திங்கட்கிழமை காலை சைபிரஸ் தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மக்ரோன், அங்கிருந்து மத்திய தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சாள்-து-கோல் கப்பலுக்குச் செல்ல உள்ளார்.
நாளை, மார்ச் 10 ஆம் திகதி பிரான்சில் இருந்து லெபனானுக்கு 20 தொன் எடையுள்ள அவசரகால பொருட்கள் செல்ல உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 6 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சைபிரஸ் சென்றிருந்த மக்ரோன், இன்று பிற்பகல் சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலுக்குச் செல்ல உள்ளார்.
“ஹர்மூஸ் ஜலசந்தி” (détroit d'Ormuz) திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் உதவும் என தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அறிவுறுத்தல்களை வழங்க, ஜனாதிபதி அங்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக சைபிரசில் வைத்து “முற்றிலும் தற்பாதுகாப்பான” முறை ஒன்றை பயன்படுத்தி, détroit d'Ormuz நீரினையை திறப்பதற்குரிய நடவடிக்கைகளை பிரான்ஸ் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan