அம்மா
16 மாசி 2024 வெள்ளி 09:26 | பார்வைகள் : 10702
முத்தமிழ் வளர்த்த அன்னையே!.....
அன்பென்னும் ஊற்றில்
குளிக்க வைத்தாய் என்னையே!....
பன்னாட்டு கடந்தாலும் உன்
பாசம் மாறுமோ!....
பல ஞானம் பிறந்தாலும் உன்
அன்பு மாறுமோ!.....
எனக்காக ஏணி ஆனாய்
மேலோங்கி உயர்ந்தேன்
எனக்காக பனித்துளியானையாய்
புல்லாய் சிரித்தேன்.
தேர்சக்கரமாய் தேய்ந்தாய் -தேரில்
என்னை வைத்து ஊர்ந்தாய் !....
பத்துமாதங்கள் தவம் செய்து
பல வலிகளோடு எம்மை ஈன்றெடுத்தாய்!....
பல நாடுகள் சென்றாலும்
பல வளங்கள் பெற்றாலும் -எங்கும்
பார்போற்றுபவள் என்றும் தாயே!....
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire