50,000+ பேர் ஓடி சாதனை! லண்டன் மாரத்தான் 2024-ன் முக்கிய அம்சங்கள்
21 சித்திரை 2024 ஞாயிறு 09:05 | பார்வைகள் : 11200
50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 2024 ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டி, இதுவரை நடந்த போட்டிகளில் அதிக பங்கேற்பு எண்ணிக்கை கொண்டதாக அமைந்தது.
குளிர்ச்சியான வானிலையில் நடைபெற்ற இந்த ஆண்டு மாரத்தான் போட்டியில், தொழில்முறை வீரர்கள் மட்டுமல்லாமல், நன்கொடை நிறுவனங்களுக்காக ஓடிய பொது மக்கள் என 50,000 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
லண்டன் மாரத்தான் ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வாக மட்டுமல்லாமல், நிதி திரட்டுவதற்கான முக்கிய தளமாகவும் மாறியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், இந்த மாரத்தான் மூலம் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக £63 மில்லியன் (63 கோடி பவுண்டுகள்) நிதி திரட்டப்பட்டது.
இதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஒரு நாள் நிதி திரட்டும் நிகழ்வாக இது திகழ்கிறது. பிரபல நபர்களான நிதியமைச்சர் ஜெர்மி ஹண்ட் இந்த ஆண்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டும், சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர் லெஜண்ட் டேவிட் வீர்(David Weir), தனது 25 வது தொடர்ச்சியான ஆண்டாக லண்டன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இது இந்த போட்டியின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
2024 ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டி, சமத்துவத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது.
முதல் முறையாக, சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர்களுக்கு, மற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு வழங்கப்படும் அதே பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்த சமத்துவத்திற்கான நடவடிக்கை, போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியில் 4 வெற்றியாளர்களும் முதல் பரிசாக £44,000, இரண்டாம் பரிசாக £24,000 மற்றும் மூன்றாம் பரிசாக £18,000 வழங்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire