Paristamil Navigation Paristamil advert login

ஓர்லி விமான நிலையத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்!

ஓர்லி விமான நிலையத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்!

5 ஆனி 2024 புதன் 16:26 | பார்வைகள் : 16791


ஓர்லி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் (contrôleurs) மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ஜூன் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. விமான கட்டுப்பாட்டாளர்கள் ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுவதாக தெரிவித்துள்ளனர்.

Unsa-Icna மற்றும் Usac-CGT ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று ஜூன் 5 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.