Paristamil Navigation Paristamil advert login

தொடருந்து நிலையத்தில் மோதல்.. சிறுவன் கைது.. வீட்டில் இருந்து கோடாரி மீட்பு!!

தொடருந்து நிலையத்தில் மோதல்.. சிறுவன் கைது.. வீட்டில் இருந்து கோடாரி மீட்பு!!

4 கார்த்திகை 2024 திங்கள் 16:03 | பார்வைகள் : 11709


RER E தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்தமை அறிந்ததே. இந்த மோதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Ozoir-la-Ferrière (Seine-et-Marne) நிலையத்தில் இந்த மோதல் இன்று காலை இடம்பெற்றது. அதில் சிறுவன் ஒருவனுக்கு தலையில் கோடாரியால் கொத்தப்படதில் மடை ஓடு உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த தாக்குதலை மேற்கொண்ட சிறுவனை சற்று முன்னர் காவல்துறையினர் கைது செய்தனர். அவனது வீடு சோதனையிடப்பட்டதில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி கண்டுபிடிக்கப்பட்டது.