La Belle Equipe : பயங்கரவாத தாக்குதலுக்குள் சிக்கிய காதல் ஜோடிகள்..!!
14 கார்த்திகை 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 25005
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டின் பயங்கரவாத தாக்குதலுக்கு இடையே ஒரு காதல் கதையும் உள்ளது.
ஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் Adrián Švec, தனது காதலி Zuzanna Szamocka உடன் பரிசுக்கு வருகை தந்திருந்தார். பரிசின் அழகை சுற்றி பார்த்துவிட்டு, நவம்பர் 13 ஆம் திகதி அன்று மாலை, 10 ஆம் வட்டாரத்தில் உள்ள La Belle Equipe கஃபே பாரில் தங்களது நேரத்தினை செலவிட்டுக்கொண்டிருந்தனர்.
இரவு உணவினை ருசித்து உண்டுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வேளை அச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு 9:38 மணிக்கு வாடிக்கையார் போல் காத்திருந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுத்தள்ள ஆரம்பித்தான்.
முதல் மூன்று நிமிடங்கள் என்ன நடக்கின்றது என தெரியாமல் அதிர்ச்சியடைந்த மக்கள் பின்னர் ஒவ்வொருவராக சிதறி ஓட ஆரம்பித்தனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத Adrián Švec, ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பின்னர், தனது காதலியை பத்திரமாக இருக்க வைத்துவிட்டு, புகைப்படக்கலைஞராக செயற்படத்தொடங்கினார்.
புகைப்படத்தில் எவ்வித இரத்த தடங்களும் இல்லையென்ற போதும், இந்த புகைப்படங்கள் 'தாக்குதலின் வீரியத்தை' பறைசாற்றுகின்றன.
அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..:

.jpg)
.jpg)
.jpg)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire