Paristamil Navigation Paristamil advert login

Louise கொலை வழக்கு.. : மூவர் கைது!

Louise கொலை வழக்கு.. : மூவர் கைது!

11 மாசி 2025 செவ்வாய் 14:06 | பார்வைகள் : 17137


Louise எனும் 14 வயதுச் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

23 வயதுடைய ஒருவர் திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில்ம் இன்று மற்றுமொரு 23 வயதுடைய நபரும் அவருடைய 55 வயதுடைய தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் Epinay-sur-Orge (Essonne) நகரில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதி ஒன்றில் இருந்து Louise இன் சடலம் மரங்களுக்கிடையே கிடந்து மீட்கப்பட்டது.

சிறுமியின் உடலில் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.