Paristamil Navigation Paristamil advert login

ஐந்துமணிநேரம் தடைப்பட்ட TGV.. குளிரில் உறைந்த பயணிகள்!!

ஐந்துமணிநேரம் தடைப்பட்ட TGV.. குளிரில் உறைந்த பயணிகள்!!

15 மாசி 2025 சனி 12:11 | பார்வைகள் : 10511


பரிசில் இருந்து புறப்பட்ட TGV தொடருந்து ஒன்று இயந்திரக்கோளாறு காரணமாக ஐந்து மணிநேரம் தடைப்பட்டது. பயணிகள் குளிரில் உறைந்திருந்தனர்.

நேற்று பெப்ரவரி 14, இரவு 8 மணிக்கு பரிசில் இருந்து புறப்பட்ட குறித்த TGV இரவு 11.30 மணிக்கு Bordeaux நிலையத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை 4.30 மணிக்கே சென்றடைந்தது. 

Hendaye நிலையத்தில் தொடருந்து பழுதடைந்தது. மின்சாரம் தடைப்பட்டது. தொடருந்துக்குள் 400 பயணிகள் குளிருக்குள் உறைந்து நின்றனர்.  

உடனடியாக மாற்று தொடருந்துக்கான ஏற்பாடு செய்யப்படவில்லை. பின்னர் ஐந்துமணிநேரம் கழித்து காலை 4.30 மணிக்கு தொடருந்து Bordeaux நகரை வந்தடைந்தது.

பயணிகளுக்கு 150% சதவீத இழப்பீடு வழங்கப்படும் என SNCF அறிவித்துள்ளது.