Paristamil Navigation Paristamil advert login

ஐந்து மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!!

ஐந்து மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!!

7 வைகாசி 2025 புதன் 10:06 | பார்வைகள் : 12039


இன்று மே 7, புதன்கிழமை நாட்டின் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Météo-France) அறிவித்துள்ளது.

நாட்டின் தென் கிழக்கு மாவட்டங்களான Hautes-Alpes, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Var மற்றும்  Haute-Corse (தீவு) ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று நண்பகலின் பின்னர் பலத்தை மழை பெய்யும் எனவும், சில இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று பனிச்சரிவு காரணமாக Savoie மாவட்டத்துக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.