இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு
21 ஆனி 2025 சனி 14:57 | பார்வைகள் : 3894
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் மிகப்பாரிய விஞ்ஞான ஆய்வகம் அழிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமாவதைக் குறிக்கும் வகையில், உலகளாவிய முக்கிய விஞ்ஞான ஆய்வுத்தளமான இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனம் (Weizmann Institute of Science) மீது ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
இதில் 50 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆய்வுகள் நாசமாகியுள்ளன.
இஸ்ரேலின் ரெஹோவோத் பகுதியில் உள்ள இந்த நிறுவனம், நியூரோ வளர்ச்சி குறைபாடுகள், புற்றுநோய், மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகளில் முன்னணியில் இருந்தது.
இரண்டு முக்கியக் கட்டிடங்கள், 45 ஆய்வுக்கூடங்கள், ஆயிரக்கணக்கான மாதிரிகள் மற்றும் 22 ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வகத்தில் 16 ஆண்டுகளாக ஆய்வு பணியில் ஈடுபட்டுவந்த ப்ரொஃ. ஓரன் சுல்டீனர், “என்னுடைய ஆய்வுக்கூடம் முற்றிலும் மண்ணாகிப்போனது... எதையும் மீட்க இயலாது,” என்று வருத்தமடைந்தார்.
இந்த தாக்குதல், இஸ்ரேலின் அறிவியல் மரபுகளுக்கு எதிரான மிகப்பாரிய இழப்பாக கருதப்படுகிறது.
1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வைஸ்மேன் நிறுவனம், நோபெல் பரிசு பெற்றவர்கள் மற்றும் டூரிங் விருது பெற்றவர்கள் பலரைக் கொண்டுள்ளது.
இது 1954-ல் இஸ்ரேலின் முதல் கணினியையும் உருவாக்கியது.
இந்த ஆய்வுக்கூடங்கள், 2015-ல் எலி மீது இதய உதிரிகளை மீள உருவாக்கி பெரும் பங்காற்றியது. தற்போது அந்த வளாகங்கள் பாழான கட்டிடங்களாக மாறிவிட்டன.
இது, உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கு ஒரு பெரும் பின்னடைவு எனவும், அறிவியல் வளர்ச்சியில் இஸ்ரேல் பெரும் பங்கு வகித்து வந்தது என்பதற்கான கடுமையான எதிரியல் தாக்கம் எனவும் விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire