விவாகரத்தை 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய நபர் - சொன்ன காரணம்
13 ஆடி 2025 ஞாயிறு 18:24 | பார்வைகள் : 2732
மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபர் கிராமத்தில் வசித்து வருபவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உண்டு.
மாணிக் அலியின் மனைவி காதலனுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், இருமுறை காதலனோடு ஓடி விட்டார்.
இருந்தும் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், அதன் பிறகும் அவரது மனைவி, தனது காதலனுடன் தொடர்பை தொடர்ந்துள்ளார். இதனையடுத்து, சட்டபூர்வமாக விவாகரத்து பெற முடிவு செய்தார்.
இந்நிலையில், விவாகரத்து கிடைத்ததும், பாலில் குளித்து அதை கொண்டாடினர்.
40 லிட்டர் பாலை ஊற்றி குளித்து அவர் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், தற்போது அவரது மகள், அவரது மனைவியுடன் உள்ளார். என் மனைவியை பிரிந்த பின்னர், நான் புதிதாக பிறந்ததை போல் உணர்கிறேன். இதனை கொண்டாடவே பாலில் குளிக்கிறேன் என பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire