இந்த 10 துறைகளில் இருப்பவர்கள்தான் அதிகம் கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்களாம்...
5 ஐப்பசி 2025 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 3260
திருமண உறவுகள் கடந்த பத்தாண்டுகளில் பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக திருமணமான தம்பதிகளிடையே கள்ளக்காதல் அதிகரித்து வருகிறது. எந்தவொரு உறவிலும் துரோகம் எப்போதும் ஒரு மோசமான பிரச்சினையாகவே இருந்து வருகிறது. உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதாவது உங்களுக்கு துரோகம் செய்வார்களா என்பதை அறிந்து கொள்ள எந்த உறுதியான வழியும் இல்லை.
இருப்பினும், இந்த விஷயம் தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், உங்கள் துணையின் தொழில் அவர் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளதா என்பதைக் கணிக்க ஒரு தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இது நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கலாம், ஆனால் உண்மைதான். இந்த பதிவில் எந்தெந்த வேலையில் இருப்பவர்கள் காதலில் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
கள்ளக்காதல் பற்றிய ஆய்வு
திருமணமானவர்களுக்கான டேட்டிங் தளமான ஆஷ்லி மேடிசன், 1,000க்கும் மேற்பட்ட பயனர்களிடம் ஆய்வு நடத்தி, குறிப்பிட்ட தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் மீறிய உறவில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளது. அவை எந்தெந்த துறைகள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சமூகம், அரசியல், கலை மற்றும் கலாச்சாரம்
இந்த பட்டியலில் அரசியல் 13-வது இடத்தைப் பிடித்தது. இருப்பினும், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஒரு சதவீதம் பேர் மட்டுமே இந்த துறையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து மற்ற தொழில்களான விவசாயம், சட்டத் துறை, கலை மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. இந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில் அவர்களின் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.
மார்க்கெட்டிங், சமூகப் பணி, ஹோட்டல் துறை
சில துறைகளில் வேலை செய்பவர்கள் சிறந்த சமூகத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தங்களுடன் பணிபுரிபவர்களுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். சுவாரஸ்யமாக, இந்த ஆய்வில் 4 சதவீத பெண் பங்கேற்பாளர்களும் 8 சதவீத ஆண் பங்கேற்பாளர்களும் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றினர், இது ஒன்பதாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதத் தொடர்ந்து சமூகப் பணி, சில்லறை விற்பனை மற்றும் ஹோட்டல் துறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
பைனான்ஸ் மற்றும் கல்வித்துறை
இந்த ஆய்வில் பெண்களில் சுமார் எட்டு சதவீதத்தினரும், ஆண்களில் ஒன்பது சதவீதத்தினரும் நிதித்துறையில் பணிபுரிந்தனர். மேலும், இந்த டேட்டிங் சேவையின் உறுப்பினர்களில் நான்கு சதவீதம் பேர் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த தொழில் செய்பவர்கள்
நீங்கள் சொந்த தொழில் தொடங்குவதற்கு, உங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறி, புதிய நபர்களைச் சந்தித்து, நாள்தோறும் இரவுப்பகல் பாராமல் உழைக்க வேண்டும். சில நேரங்களில், உங்கள் நாளின் பெரும்பகுதியை வீட்டிற்கு வெளியே செலவிடுவதும், உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடாமல் இருப்பதும் பல சந்தர்ப்பங்களில் கள்ள உறவிற்கு காரணமாகிறது. ஆஷ்லே மேடிசன் பயனர்களிடையே இந்தப் பட்டியலில் சொந்த தொழில் நான்காவது மிகவும் பிரபலமான துறையாக மாறியது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம்
இந்த பட்டியலில் ஐடி துறை மூன்றாவது இடத்திலும், மருத்துவம் இரண்டாவது இடத்திலும் இருந்தன. அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்தத் துறையில் ஐந்து சதவீத ஆண் பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும்போது 23 சதவீத பெண்கள் பங்கேற்றனர்.
கைத்தொழில்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கைத்தொழில்கள். பயனர்களிடையே மிகவும் பிரபலமான தொழில் துறையாக கட்டுமானம், பிளம்பிங், வெல்டிங் போன்ற கைத்தொழில்கள் இருந்தன. பங்கேற்பாளர்களில் நான்கு சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 29 சதவீதம் பேர் ஆண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire