டி20 உலகக்கிண்ணத்திலிருந்து அதிர்ச்சி வெளியேற்றம் - தலைவரை நியமித்த வங்காளதேசம்
28 தை 2026 புதன் 13:43 | பார்வைகள் : 2410
வங்காளதேச கிரிக்கெட் அணி நஸ்முல் இஸ்லாமை மீண்டும் நியமித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து, வங்காளதேச கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.
அதற்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்பட, இவ்விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில், வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB) ஒரு நிலைப்பாட்டு மாற்றத்தை எடுத்துள்ளது.
அதாவது, BCB-யின் இயக்குநரான M.நஸ்முல் இஸ்லாமை (Nazmul Islam) மீண்டும் அதன் நிதி குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைக் கோரி அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்திற்கு, நஸ்முல் இஸ்லாம் அளித்த பதிலைப் பரிசீலனை செய்த பிறகு, வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் அவரது மறுநியமனம் உறுதி செய்யப்பட்டது.
அவரை நிதிக்குழுவில் இருந்து நீக்குவது குறித்த, கடந்த வார முடிவை ரத்து செய்ய வாரியம் தீர்மானித்தது.
வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதன் மிகப்பெரிய நிர்வாக மற்றும் நற்பெயர் நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொண்டுள்ள சூழலில் இந்த நிலைப்பாட்டு மாற்றம் வந்துள்ளது.
மேலும், தங்களது உள் நிர்வாகத்தின் மீதான ஆய்வையும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire