40 வயதுக்கு மேல் சோர்வு வர காரணம் இதுவா?
14 மாசி 2026 சனி 15:18 | பார்வைகள் : 3199
ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமே 40 வயதுக்கு மேல் உடலில் ஒரு விதமான சோர்வு வந்துவிடும். உடல் ஆக்டிவாகவே இருக்காது. எப்போதும் உடல் மந்தமாகவே இருக்கும்.. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. 60 வயது ஆகிவிட்டது போல மனம் சோர்வு பெறும்.
இந்நிலையில்தான் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி உடல் சோர்வை உணர்வதற்கு முதுமை ஒரு காரணமாக இருந்தாலும் வாழ்வியல் அழுத்தங்களும் முக்கிய காரணம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது..
குடும்பம் மற்றும் வேலை என வாழ்வின் அதிகப்படியான பொறுப்புகள் 40 வயதில் ஏற்படுவதால் மூளை அதிக ஆற்றலை உட்கொள்வதாக லண்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்..
நுணுக்கமான உயிரியல் மாற்றங்களும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், 30 வயது முதலே உடல் தசைவுகளின் அளவு குறைய தொடங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பெண்களின் ஹார்மோன் மாற்றங்களும், ஆண்களின் மன அழுத்தமும் இந்த சோர்வை இரட்டிப்பாக மாற்றுகிறது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire