இளையராஜாவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க காரணம் என்ன ?
18 மாசி 2026 புதன் 12:24 | பார்வைகள் : 2417
1970-களில் தமிழ் சினிமாவில் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜா, பல தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் இசையமைப்பதோடு, பாடல் பாடுவது, எழுதுவது என பன்முக திறமை படைத்தவராக இருந்தார் இளையராஜா. சமீப காலமாக, தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து வந்தார் இளையராஜா. ஆனால் தற்போது சரிகம நிறுவனம் தொடுத்த வழக்கில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்துள்ளார்.
சரிகம நிறுவனம், இந்த 134 படங்களின் பாடல் உரிமைகளை அந்தந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து சட்டப்படி வாங்கியதாக கூறியுள்ளது. இளையராஜா இந்த பாடல்களை அமேசான் மியூசிக், ஜியோசவன், ஐடியூன்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களுக்கு விற்றது சட்டவிரோதம் என்றும் வாதிட்டது. காப்புரிமை சட்டத்தின்படி, ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரே அந்த படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களுக்கும் முதன்மை உரிமையாளர் என்பது சரிகம நிறுவனத்தின் வாதம். இதை ஆதரிக்கும் விதமாக தேவையான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, 134 திரைப்படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, அதன் மீதான உரிமையை கோரவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 2001 வரை இசையமைக்கப்பட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் இதில் அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், இளையராஜாவின் அறிமுக படமான 'அன்னக்கிளி'யும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire