இங்கிலாந்து ஹாரி பரூக்கின் சகாப்தத்தில் உள்ளது - இலங்கையில் வெற்றியை நிலைநாட்டிய வீரர்
28 மாசி 2026 சனி 13:21 | பார்வைகள் : 2044
ஹாரி ப்ரூக்கின் தலைமையில் இங்கிலாந்து அணி வெற்றிகளை பெற்றுவருவதாக, சக துடுப்பாட்ட வீரர் வில் ஜேக்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொழும்பில் நேற்று நடந்த போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் வில் ஜேக்ஸ் அபாரமாக ஆடி, ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 32 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசி வெற்றி பெற வைத்தார்.
மேலும் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
போட்டிக்கு பின்னர் பேசிய வில் ஜேக்ஸ் (Will Jacks), "இந்த அணி ஹாரி ப்ரூக்கின் சகாப்தத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
அவர் எங்கள் வெள்ளை பந்து கேப்டன். நாங்கள் உண்மையிலேயே கவனம் செலுத்தி வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். அவர் எங்களை ஒரு குறிப்பிட்ட வழியில் விளையாட வைத்திருக்கிறார்.
மேலும் அவர் தலைமையிலான குழுவைச் சுற்றியுள்ள சூழல் மிகவும் அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வேடிக்கையாக இருப்பதையும், சரியான வழியில் ஆட்டத்தை அணுகுவதையும் அனைவரும் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். அதனால்தான் நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நினைக்கிறேன்" என தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire