'கருப்பு' படத்தின் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே. பாலாஜி!
22 பங்குனி 2026 ஞாயிறு 15:34 | பார்வைகள் : 1893
தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தைச் சுற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்யிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது, ‘கருப்பு’ படத்தின் ஆரம்பக் கருத்து உருவான போது, அந்தக் கதையை விஜய்க்கு சொல்லியதாகவும், அதை கேட்ட விஜய் உடனடியாக ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார். கதையின் மையக் கருத்து அவருக்கு பிடித்திருந்தாலும், திரைக்கதையை முழுமையாக உருவாக்க மேலும் காலம் தேவைப்பட்டதாக சொன்னேன். அதனால் உடனடியாக படம் தொடங்கும் நிலை ஏற்படவில்லை.
இதற்கிடையில், விஜய் தனது அரசியல் பயணத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியதால், இந்த திட்டம் இயல்பாகவே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த கதையை மாற்றங்களுடன் மீண்டும் வடிவமைக்க முடிவு செய்தார் RJ Balaji. சமகால சூழ்நிலைக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர், இந்த புதுப்பிக்கப்பட்ட கதையை நடிகர் சூர்யாவிடம் கூறியபோது, அவர் அதை மிகவும் விரும்பியதாகவும், இந்த திட்டம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் நடிப்பில் உருவாகும் ‘கருப்பு’ திரைப்படம் சமூகப் பின்னணியுடன் கூடிய வலுவான கருத்தை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் வெளியாகிய தன் பின்னர், ரசிகர்கள் மத்தியில் “விஜய் நடித்திருந்தால் எப்படி இருக்கும்?” என்ற விவாதமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், சூர்யா இந்த கதையில் எப்படி தனது நடிப்பால் புதிய கோணத்தை வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், ஒரு கதையின் பயணம் எப்படி பல கட்டங்களை கடந்து இறுதியில் வேறு நடிகரிடம் வந்து சேருகிறது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. ‘கருப்பு’ படம் வெளியான பிறகு, இந்த முடிவு சரியானதா என்பதை ரசிகர்கள் தீர்மானிப்பார்கள் என்பது உறுதி.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'கருப்பு' படத்தின் டீசர், அப்போதிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டீசரில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். வெள்ளை நிற உடையில் வழக்கறிஞர் சரவணனாகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் கையில் அருவாளுடன் கருப்பு நிற உடையில் ஆக்ரோஷமாக என இரட்டை வேடங்களில் நடித்துள்ளது தெரியவந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான தோற்றம் கொண்ட போஸ்டரைப் பகிர்ந்து, படம் மே 14, 2026 அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire