மைதானத்தில் தாக்கிக்கொண்ட வீரர்கள் - ஒரே போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு
10 பங்குனி 2026 செவ்வாய் 04:53 | பார்வைகள் : 1782
கால்பந்து போட்டியின் போது வீரர்கள் மோதிக்கொண்டதால் ஒரே போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சில் Cruzeiro மற்றும் Atletico Mineiro அணிகளுக்கு இடையேயான காம்பியோனாடோ மினிரோ கால்பந்து போட்டி 09.93.2026 நடைபெற்றது.
பெலோ ஹொரிசாண்டேயில் நடைபெற்ற இந்த போட்டியில், க்ரூஸீரோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், க்ரூஸீரோவின் மிட்ஃபீல்டர் கிறிஸ்டியன் கோல் போட முயற்சிக்கும் போது கீழே விழுந்து விட, மினிரோ கோல்கீப்பர் எவர்சன் அதனை தடுத்து, வேண்டுமென்றே தனது கால் முட்டியால் கிறிஸ்டியனின் முகத்தில் இடிப்பார்.
இதனை தொடர்ந்து இரு அணி வீரர்களும் மைதானத்தில் கடுமையாக தாக்கி கொண்டனர்.
இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
பிரான்சில் இதுவே அதிக வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட போட்டி ஆகும்.
முன்னதாக, 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் 22 ரெட் கார்டு வழங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire