இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்
10 பங்குனி 2026 செவ்வாய் 04:57 | பார்வைகள் : 1849
தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டனை இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.
டி20 உலகக்கிண்ணத்தில் அதிர்ச்சிகர தோல்வியால் இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) விலகினார்.
அதன் பின்னர் 2011யில் ஐசிசி உலகக்கிண்ணத்தை வெல்ல இந்திய அணியை வழிநடத்திய கேரி கிர்ஸ்டனை, தேசிய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஏப்ரல் 14, 2028 வரை கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான கேரி கிர்ஸ்டனின் பதவிக் காலத்தில், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தது.
மிக சமீபத்தில் கிர்ஸ்டன் டி20 உலகக்கிண்ணத்தின்போது நமீபியாவின் ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire