Paristamil Navigation Paristamil advert login

இலங்கை முழுவதும் விசேட சுற்றிவளைப்பு - 576 பேர் கைது

இலங்கை முழுவதும் விசேட சுற்றிவளைப்பு - 576 பேர் கைது

28 சித்திரை 2026 செவ்வாய் 13:28 | பார்வைகள் : 2010


இலங்கை முழுவதும் விசேட சுற்றிவளைப்பில் 576 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (27) மாத்திரம் சந்தேகத்தின் பேரில் 576 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 27,901 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 227 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.