முழு நாடுமே ஒன்றாக - இலங்கையில் 150,000-இற்கும் மேற்பட்டோர் கைது
8 வைகாசி 2026 வெள்ளி 18:34 | பார்வைகள் : 2036
முழு நாடுமே ஒன்றாக தேசிய மட்டத்திலான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் 150,000-இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி முதல் இன்று (08) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 169,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 1,937 கிலோ 270 கிராம் ஹெரோயின், 1,994 கிலோ 241 கிராம் ஐஸ் போதைப்பொருள், 431 கிலோ 242 கிராம் குஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 2,767 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 318 பேர் தொடர்பில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2,031 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire