பரிஸில் தடைசெய்யப்பட்ட தீவிர வலதுசாரி பேரணி: ஒன்பது பேர் கைது!!
9 வைகாசி 2026 சனி 16:24 | பார்வைகள் : 2719
பரிஸில் நடைபெற இருந்த தீவிர வலதுசாரி “மே 9-குழு” பேரணிக்கு நிர்வாக நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, ஒன்பது பேர் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்கள் “வன்முறைக்கு திட்டமிட்ட குழுவில் பங்கேற்றது” என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை Saint-Michel பகுதியில் நடைபெற்றது. அங்கு எதிர்-பாசிச அமைப்புகளும் கூடும் திட்டம் இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் தீவிர வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. காவல்துறையினர் அவர்களிடமிருந்து கம்பிகள், பாதுகாப்பு கையுறைகள் மற்றும் கத்திகள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், தடை உத்தரவை மீறியதற்காக 12 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த பேரணி, 1994ஆம் ஆண்டு உயிரிழந்த தீவிர தேசியவாத செயற்பாட்டாளர் Sébastien Deyzieu-வை நினைவுகூர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு லியோனில் நடந்த இதேபோன்ற பேரணி பொது அமைதியை பாதித்ததாக கூறி, இந்த ஆண்டு பேரணியை அதிகாரிகள் தடை செய்தனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire