இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
14 சித்திரை 2026 செவ்வாய் 20:08 | பார்வைகள் : 1785
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட இடங்கள் முக்கியமாக அதி அபாயகரமானவை, மத்திய அபாயகரமானவை மற்றும் குறைந்த அபாயகரமானவை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, அதி அபாயகரமான பிரிவின் கீழ் உள்ள வீடுகள் மீண்டும் முன்னுரிமை 1, முன்னுரிமை 2 மற்றும் முன்னுரிமை 3 என துணைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
இந்த முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே இழப்பீடு வழங்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதி அபாய வலயத்தில் உள்ள அனைவரும் மீளக் குடியேற்றப்பட்ட போதிலும், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியை வினைத்திறனாகப் பகிர்ந்தளிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீங்கள் எந்த முன்னுரிமைப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை அந்தந்தப் பிரதேச செயலகத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.
ஒரு நிலப்பரப்பு ஒரே நேரத்தில் பரிசோதிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், முன்னுரிமை வரிசைப்படியே இழப்பீடு வழங்கப்படும்.
இதன் காரணமாக, உங்கள் அயலவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், முதற்கட்டமாக உங்களுக்கு அந்த நிதி கிடைக்காமல் போகலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire