DJ பாடல் மூலம் கேலி செய்த RCB - பிசிசிஐயிடம் புகாரளித்த CSK
16 சித்திரை 2026 வியாழன் 15:30 | பார்வைகள் : 1592
கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டியில், RCB அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், RCB நிர்வாகம் மைதானத்தில் ஒலித்த DJ, CSK வீரர்களை கேலி செய்வதாக உள்ளது எனBCCI யிடம் CSK நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது.
CSK வீரர்கள் துடுப்பாட்ட ஆட மைதானத்தில் களமிறங்கும் முன்னர் "தோசை, இட்லி, சாம்பார், சட்னி" என்ற பாடலை DJ ஒலிக்கச் செய்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள CSK CEO காசி விஸ்வநாதன், "டிஜேக்கள் பொதுவாக உள்ளூர் அணிக்கு ஆதரவளிக்கவே இருப்பார்கள் அதில் தவறில்லை. ஆனால் சின்னசாமி மைதானத்தில் அது வித்தியாசமாக இருந்தது.
எதிரணி வீரர்களைக் கிண்டல் செய்வதும், அவர்களைப் பற்றித் தேவையில்லாத கருத்துக்களைக் கூறுவதும் ஏற்க முடியாதது.
எங்கள் வீரர்களுக்கு எதிராக சில கருத்துகள் கூறப்பட்டன. அதைக் கருத்தில் கொண்டு, இது குறித்து விசாரிக்குமாறு பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் சென்னையில் நடந்த ஒரு போட்டிக்கு முன்னதாக, RCB வீரர் ஜிதேஷ் சர்மா “தோசை, இட்லி, சாம்பார், சட்னி” என்று பாடும் வீடியோவை ஆர்சிபி பகிர்ந்தது. இது CSK ரசிகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் நடந்த அடுத்த போட்டியில் ஜிதேஷ் ஆட்டமிழந்தபோது, CSK அணியின் டிஜே அதே பாடலை ஒலிபரப்பினார்.
ஆனால், அதன் பின்னர் CSK நிர்வாகம் இதில் தலையிட்டு, எதிரணி வீரர்களை கேலி செய்வது போல் பாடல்களை ஒலிபரப்ப கூடாது என அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன் பின்னர் இத்தகைய சம்பவம் அங்கு நடைபெறவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire