இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
21 சித்திரை 2026 செவ்வாய் 18:17 | பார்வைகள் : 2286
இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது.
இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் என்றும், இது நோயாளிகள், மருத்துவமனைகள் மற்றும் முழு சுகாதாரக் கட்டமைப்பையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உலகளாவிய விநியோகச் சங்கிலி செலவுகள், செலாவணி விகித அழுத்தங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தாமதங்கள் ஆகியவை மருந்துகளின் தடையற்ற ஓட்டத்தைப் பராமரிப்பதில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, எரிபொருள் விலைகள் சுமார் 38 வீதத்தாலும், சரக்குக் கட்டணங்கள் 40 வீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளன. அத்துடன், மருந்து மூலப்பொருட்களின் உலகளாவிய விலைகள் சில சந்தர்ப்பங்களில் 70 வீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை இறக்குமதி செலவை கணிசமாக உயர்த்தியுள்ளது.
தற்போதைய இறக்குமதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் மற்றும் விலை மீளாய்வு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் இந்த அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதாக SLCPI குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், முறையான விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகும் போது, அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோத வழிகள் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இது தரமற்ற அல்லது போலியான மருந்துகள் பொதுமக்களை அடையும் அபாயத்தை அதிகரிப்பதுடன், நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பாதித்து சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என சம்மேளனம் எச்சரித்துள்ளது.
எனவே, இறக்குமதி உரிமச் செயலாக்கத்தில் உள்ள தாமதங்களை நிவர்த்தி செய்து, மருந்து விநியோகச் சங்கிலியை ஸ்திரப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மேளனம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
விநியோகச் சங்கிலியில் இன்றைய அழுத்தம் நாளைய தேசிய மருந்துப் பற்றாக்குறையாக மாறுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இலங்கை மருந்துச் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire