எனக்கு ஐபிஎல் கிண்ணம்தான் முக்கியம்! சதம் அல்ல - வைபவ் சூர்யவன்ஷி
28 வைகாசி 2026 வியாழன் 14:31 | பார்வைகள் : 1462
வைபவ் சூர்யவன்ஷி தனக்கு சதம் அடிப்பதைத் தவிர கிண்ணத்தை வெல்வதே முக்கியம் என்று தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ஓட்டங்கள் விளாசினார்.
அவர் சதம் விளாசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சிக்ஸர் அடிக்க முயன்று ப்ரபுல் ஹிங்கே பந்துவீச்சில் சமரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று அவரது ஆட்டத்தை பாராட்டியது. மேலும், பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
போட்டிக்கு பின்னர் பேசிய வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi), "எதிரணி பந்துவீச்சாளர்கள் யார், இந்த விக்கெட்டில் நான் எப்படி எதிர்கொள்ளலாம், பவுண்டரிகள் எவ்வளவு பெரியவை என்பது போன்ற விடயங்களைப் பற்றி சிந்திப்பேன்.
எனது நோக்கத்தில் நேர்மையாக இருக்க முயற்சிப்பேன். அப்படி செய்யும்போது பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். அதனால், நான் அதைத் தொடரவும், ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிப்பேன்.
முடிந்தவரை பங்களிப்பதே எனது ஒரே நோக்கமாக இருந்தது; ஏனென்றால் சதங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆனால் இப்போது கிண்ணத்தை எப்படி வெல்வது என்பதில்தான் கவனம் உள்ளது.
எங்காவது எனக்கு சிரமம் இருப்பதாக உணர்ந்தால், நான் அதில் கவனம் செலுத்துவேன். எதிரணி என்ன திட்டமிடுகிறது என்பதைப் பற்றி நான் சிந்திப்பதில்லை, அது அவர்களுடைய திட்டம். எனது திட்டத்தில் நான் கவனம் செலுத்தி, இயல்பான கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்பேன்" என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire