இலங்கையில் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான பேருந்து - பலர் காயம்
29 வைகாசி 2026 வெள்ளி 15:32 | பார்வைகள் : 1169
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 'திஸ் எகே ஹந்திய' (31 சந்தி) பகுதியில் இன்று (29) மதியம் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலை மற்றும் கொட்டியாகல ஆகிய பகுதிகளுக்கு இடையே பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan