வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் குடும்பத்துடன் மாயம்
1 ஆனி 2026 திங்கள் 18:15 | பார்வைகள் : 1225
வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது.
வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகரே 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பல வர்த்தகரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இளையதம்பி சுகுமார் (வயது 41) என்ற நபரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வவுனியாவில் பல நகை கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்ததுடன், நகைக் கடைகளுடன் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருந்தார்.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாருக்கோ அல்லது 0774101802 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan