குவைத் வேலைவாய்ப்பு! 27 நாடுகளுக்கு தடை - இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு அனுமதி
10 ஆனி 2026 புதன் 14:03 | பார்வைகள் : 1505
குவைத் அரசு வீட்டு வேலைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையை 10 ஆக மட்டுப்படுத்தியுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், வியட்நாம், எத்தியோப்பியா, எரிட்ரியா, தென்னாபிரிக்கா, பெனின் மற்றும் செனகல் (ஆண் பணியாளர்கள் மட்டும்) ஆகிய நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய முடியும்.
இதனுடன், 27 நாடுகளிலிருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு தொழிலாளர் துறையின் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தவும், ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire