Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் - வளைகுடாவில் மீண்டும் பதற்றநிலை

அமெரிக்காவின் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் - வளைகுடாவில்  மீண்டும் பதற்றநிலை

12 ஆனி 2026 வெள்ளி 13:55 | பார்வைகள் : 1061


அமெரிக்க இராணுவ முகாம்களின் 18 இலக்குகளைத் தான் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ராடார் கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதலில், பலர் காயமடைந்துள்ளனர்.

ராடார் வசதிகள் மற்றும் வானூர்தி போக்குவரத்து மேலாண்மை உபகரணங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குவைத் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அண்மையில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களின் 18 இலக்குகளைத் தான் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.