ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி
15 வைகாசி 2026 வெள்ளி 15:39 | பார்வைகள் : 1760
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் ‛ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. முதல்பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், வசந்த் ரவி உள்ளிட்டோர் தொடருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இருப்பினும் பேட்ஜ் ஒர்க் என சொல்லப்படும் விடுபட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
சென்னை, ஈசிஆர் ரோட்டில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆர்ட் டைரக்ஷன் பணியை சேர்ந்த சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன், 28 என்பவர் மின் தொழிலாளியாக பணி செய்து வந்தார். பணியின் போது மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire