பரிஸில் OGC நீஸ் நகர கால்பந்தாட்ட ஆதரவாளர்கள் வன்முறை: 65 பேர் கைது, 6 பேர் காயம்!!
22 வைகாசி 2026 வெள்ளி 22:19 | பார்வைகள் : 3409
பரிஸ் நகரின் செயின்ட்-மார்டின் கால்வாய் பகுதியில் வியாழக்கிழமை 21ம் திகதி இரவு முதல் வெள்ளிக்கிழமை 22ம் திகதி அதிகாலை வரை கடும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. OGC நீஸ் கால்பந்து அணியின் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அப்பகுதியில் அச்சுறுத்தும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 65 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சம்பவத்தை நேரில் கண்ட பெண் ஒருவர் பதிவு செய்த காணொளியில், ஒருவரை பலர் சேர்ந்து காலாலும் கையாலும் கடுமையாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. “இளம் வயதினரின் ஒரு கூட்டம் திடீரென வந்தது. அவர்கள் அனைவரையும் தாக்கினர். பலரையும் திட்டியும் அச்சுறுத்தியும் நடந்துகொண்டனர்” என அந்தப் பெண் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் தகவலின்படி, நீஸ் ஆதரவாளர்கள் முதலில் செயின்ட்-மார்டின் கால்வாய் பகுதியைச் சுற்றி ஊர்வலமாக சென்றுள்ளனர். பின்னர், இதுவரை தெளிவாக தெரியாத காரணத்தால் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட பலர் கறுப்பு உடை அணிந்திருந்ததுடன், சிலர் முகமூடி அணிந்தும் திட்டமிட்ட வகையிலும் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வன்முறையில் ஒரு உணவகமும் சேதமடைந்துள்ளது. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அச்சத்துடன் தப்பித்துள்ளனர். “நான் மேசையின் கீழ் மறைந்து கொண்டிருந்தேன். எங்கள் குழுவில் யாருக்கும் காயம் இல்லை. ஆனால் தற்போது கண்ணாடி பொருட்களும், பயன்பாட்டு சாதனங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன” என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Préfecture de Police de Paris முன்னெடுத்து வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire