பரிஸ் விமான நிலையங்களில் வேலைநிறுத்தம் – தொழிற்சங்கங்கள் அழைப்பு!!
23 வைகாசி 2026 சனி 07:30 | பார்வைகள் : 2139
பரிஸ் நகர விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு அனுமதி பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, தொழிற்சங்கங்கள் வருகின்ற ஜூன் மாதம் 18ம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த நடவடிக்கை பரிஸின் முக்கிய மூன்று விமான நிலையங்களிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றுவதற்கு அவசியமான பாதுகாப்பு அனுமதிகளை வழங்கும் நடைமுறையில் பரிஸ் காவல்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. குறிப்பாக பயணிகள் சரக்கு பராமரிப்பு, தரை சேவை மற்றும் ஓடுதள பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
Aéroports de Paris நிறுவனத்துடன் இணைந்த தொழிற்சங்கங்கள், பாதுகாப்பு அனுமதி மறுக்கப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவது ஊழியர்களின் பணிநீக்கத்திற்கே வழிவகுக்கலாம் என எச்சரித்துள்ளன. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து வெளியிடவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan