சட்டபூர்வ குடியேற்றத்தை மூன்று ஆண்டுகள் நிறுத்த வேண்டும் – நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin கருத்து!!
24 வைகாசி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 4102
நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் சட்டபூர்வ குடியேற்றத்தை மூன்று ஆண்டுகள் வரை இடைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒருங்கிணைப்பு மற்றும் சமூக ஒத்துழைப்பு திறன் தற்போது அதன் உச்சவரம்பை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“தற்போது நடைமுறையில் உள்ள குடியேற்ற முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்த டர்மனின், வேலைவாய்ப்பு அடிப்படையில் வழங்கப்படும் தங்கும் அனுமதிகளுக்கு இனி குடும்ப இணைப்பு உரிமை வழங்கப்படக்கூடாது என்றும் கூறினார். சில துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியமாக இருந்தாலும், குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குடியேற்ற எண்ணிக்கைக்கு கட்டாய வரம்புகளை விதிக்க பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது நடைமுறையில் உள்ள ஆலோசனை அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறை போதுமானதல்ல என்றும், குடியேற்ற விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தாம் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Emmanuel Macron தலைமையிலான பல அரசுகளில் முக்கிய பதவிகளில் இருந்த டர்மனின், 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என கூறினார். நாட்டின் நலனே தனது முடிவிற்கு அடிப்படையாக இருக்கும் என்றும், முன்னாள் பிரதமர் Édouard Philippeக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire