இலங்கையர்கள் குழுவொன்று டுபாயில் கைது
26 வைகாசி 2026 செவ்வாய் 15:47 | பார்வைகள் : 1551
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ‘ஷிரான் பாசிக்’ மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினரான ‘எல்டோ தர்மே’ என்பவர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, எல்டோ தர்மே’ என்பவருடன் இவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘எல்டோ தர்மே’ என்பவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் ஷிரான் பாசிக் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இவர் அமெரிக்காவிற்கும் தேடப்படும் ஒரு நபராக விளங்குகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இவர் டுபாயில் ஒரு பெரும் கோடீஸ்வரரைப் போல மறைந்து வாழ்ந்து வந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கைக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் 5 முக்கிய பெரும் கடத்தல்காரர்களில் ஷிரான் பாசிக் என்பவரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இவரது கைது குறித்து இலங்கைக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire