Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தில் ஏறி அமெரிக்கக் கொடியை கட்டிய நபர் கைது!!

ஈஃபிள் கோபுரத்தில் ஏறி அமெரிக்கக் கொடியை கட்டிய நபர் கைது!!

5 ஆடி 2026 ஞாயிறு 15:23 | பார்வைகள் : 2263


சனிக்கிழமை பிற்பகல், ஒருவர் ஈஃபிள் கோபுரத்தில் ஏறி அமெரிக்க தேசியக் கொடியை கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோபுரத்தின் முன்பகுதியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களும் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன.

காவல்துறையின் தகவலின்படி, பிற்பகல் 3.45 மணியளவில் அந்த நபர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுக்கு இடையில் ஏறிக்கொண்டிருந்தார். மூன்றாம் தளத்தை அடைந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். தனது செயலுக்கான காரணம் குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அவர் "பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தல்" என்ற குற்றச்சாட்டின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பின்னர், ஈஃபிள் கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த அமெரிக்க தேசியக் கொடியை பரிஸ் காவல்துறையின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அகற்றியது.

இந்தச் சம்பவம், அமெரிக்கா தனது சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவை ஜூலை 4 அன்று கொண்டாடிய நிலையில் நடைபெற்றது. இருப்பினும், இந்தச் செயல் அந்தக் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.