Paristamil Navigation Paristamil advert login

தீயணைப்பு வீரரும் ஒருநபரும் உயிராபத்தில்!!

தீயணைப்பு வீரரும் ஒருநபரும் உயிராபத்தில்!!

5 ஆடி 2026 ஞாயிறு 18:09 | பார்வைகள் : 1321


அதி உயர்ந்த காட்டுத்தீ அபாயம் : தென் பிரான்சின் 7 மாவட்டங்கள் செம்மஞ்சள் அபாய நிலையில், Météo‑France இந்த ஞாயிற்றுக்கிழமை தென் பிரான்சின் 7 மாவட்டங்களை “மிக உயர்ந்த காட்டுத்தீ அபாயம்”  என வகைப்படுத்தியுள்ளது.

இதனுடன், Pyrénées‑Orientales பகுதியில், சனிக்கிழமை மாலை புதிய காட்டுத்தீ ஒன்று ஏற்பட்டுள்ளது.

தீ அணுக முடியாத மலைப்பகுதியில் ஏற்பட்டது

சனிக்கிழமை இரவு முதல்

1,500 ஹெக்டேர்களுக்கு மேல் பரப்பை எரித்துள்ளது

உலர்ந்த வானிலை + Tramontane காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது

ஞாயிற்றுக்கிழமை 17h23 நிலவரப்படி, Trévillach — தீயணைப்பு வீரர் மற்றும் அந்தப் பகுதியின் வசிப்பவர் ஒருவரும் உயிராபத்தான நிலையில் நிலையில் உள்ளனர்.

இந்த தீ:

சனிக்கிழமை இரவு Trévillach பகுதியில் தொடங்கியது

1,650 ஹெக்டேர்கள் பரப்பை ஏற்கனவே எரித்துள்ளது

தீ ஒரு கட்டத்தில் குறைந்திருந்தாலும், Tramontane காற்றின் தாக்கத்தால் மீண்டும் பலம் பெற்றுள்ளது.