ரசிகர்களுக்கு த்ரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்!
6 ஆடி 2026 திங்கள் 13:06 | பார்வைகள் : 937
சூர்யாவுடன் நடித்த 'கருப்பு' படத்திற்குப் பிறகு த்ரிஷாவின் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனாலும், ரசிகர்கள் இன்னும் அந்தப் படத்தின் ஹேங்ஓவரில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
த்ரிஷா தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அதற்கு காரணம் சினிமா மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும்தான். தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யுடன் த்ரிஷாவுக்கு இருக்கும் 'நட்பு' குறித்தும் செய்திகள் பரவி வருகின்றன.
விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான கொண்டாட்டங்களின் போது, த்ரிஷா அவருடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர் போலவே விஜய் அருகிலேயே அவர் வலம் வந்தது, அவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சை கிளப்பியது.
சமீபத்தில், விஜய்யின் பிறந்தநாளின் போது, த்ரிஷா அவருடன் ஒரு ஸ்பெஷல் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இருவரும் தனிமையில் பிறந்தநாள் கொண்டாடியதாக செய்திகள் பரவின. ஆனால், இதன் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், த்ரிஷாவின் படங்களுக்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 'த்ரிஷா மேடம், உங்களை மீண்டும் எப்போது திரையில் பார்ப்பது?' என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள த்ரிஷா, 'நான் உங்களை நீண்ட காலம் மிஸ் செய்ய விரும்பவில்லை. அக்டோபர் 16, 2026 அன்று உங்களை சந்திக்க வருகிறேன். வரவேற்க தயாராக இருங்கள்' என்று கூறியுள்ளார். வேறு ஒன்றுமில்லை, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்துள்ள 'விஷ்வம்பரா' திரைப்படம் தான் 2026 அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அன்று திரையில் தோன்றி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இருக்கிறார் த்ரிஷா.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire