Paristamil Navigation Paristamil advert login

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை! அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் கண்டனம்

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை! அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் கண்டனம்

6 ஆடி 2026 திங்கள் 21:32 | பார்வைகள் : 697


பசிபிக் பெருங்கடலில் சீனா மேற்கொண்ட ஏவுகணை சோதனைக்கு எதிராக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளன.

சீன கடற்படை, அணு சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை பசிபிக் பெருங்கடலில் சோதனைக்காக ஏவியது.

இந்த சோதனை, சீனாவின் வருடாந்திர ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங், “சீனாவின் வேகமான ராணுவ வளர்ச்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடைபெறுகிறது. இது பிராந்தியத்தில் நிலைதடுமாறச் செய்கிறது” எனக் கூறியுள்ளார்.

ஜப்பான் அரசு, சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கைகள் கடுமையான கவலைகளை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

சோதனைக்குப் பிறகு விண்வெளி கழிவுகள் ஜப்பான் பொருளாதார மண்டலத்தில் விழும் வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படைக்கு சீன அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், “பசிபிக் பிராந்தியத்தை ஏவுகணை சோதனை தளமாக சீனா பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது அல்ல” எனக் கண்டனம் தெரிவித்தார்.

சீனா, இந்த சோதனை எந்த நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்தாலும், அண்டை நாடுகள் இதை பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.