Paristamil Navigation Paristamil advert login

"எழுதத் தெரியாத முட்டாள்": எம்பாப்பேவை இழிவுபடுத்திய பராகுவே செனட்டரின் இனவெறி கருத்துகளுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம்!!

"எழுதத் தெரியாத முட்டாள்": எம்பாப்பேவை இழிவுபடுத்திய பராகுவே செனட்டரின் இனவெறி கருத்துகளுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம்!!

7 ஆடி 2026 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 2041


பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2026 உலகக் கோப்பை காலிறுதிக்கு பிரான்ஸ் முன்னேறியதைத் தொடர்ந்து, பராகுவே செனட்டர் Celeste Amarilla, பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே குறித்து சமூக வலைத்தளமான X-இல் "அந்த முட்டாள் எழுதக்கூடக் கற்றுக்கொள்ளவில்லை. தாய்ப்பால் குடிப்பதற்குப் பதிலாக, அவன் தேங்காய்களைக் குடித்தான்" போன்ற இனவெறி மற்றும் அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டார். அவரது பதிவுகள் பிரான்ஸ் முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கருத்துகளை பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் மரினா ஃபெராரி கடுமையாகக் கண்டித்து, "இனவெறி தாக்குதல்களை பிரான்ஸ் ஒருபோதும் ஏற்காது" என்று தெரிவித்தார். மேலும், எம்பாப்பே, பிரான்ஸ் பயிற்சியாளர் மற்றும் முழு அணிக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் பல பிரான்ஸ் அரசியல் தலைவர்களும் எம்பாப்பேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்பாப்பேவும் பதிலளித்து, செனட்டரின் கருத்துகளை கண்டித்ததுடன், பராகுவே மக்களுக்கு தனது மரியாதையைத் தெரிவித்தார்.

உலகக் கோப்பை 16-அணி சுற்றில் நடைபெற்ற கடினமான போட்டியில், எம்பாப்பே அடித்த பெனால்டி கோலால் பிரான்ஸ் வெற்றி பெற்றது. போட்டியின் போது பராகுவே வீரர்களின் கடுமையான ஆட்டம் மற்றும் நடுவரின் சில முடிவுகளும் போட்டிக்குப் பிறகு பரவலாக விவாதிக்கப்பட்டன.