Paristamil Navigation Paristamil advert login

ரசிகர்களிடன் மன்னிப்பு கேட்ட ரவி மோகன்!

ரசிகர்களிடன் மன்னிப்பு கேட்ட ரவி மோகன்!

7 ஆடி 2026 செவ்வாய் 17:24 | பார்வைகள் : 1037


ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் ரவி. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரவி பிரிந்தார்.

மேலும் தனது மனைவி மற்றும் மாமியார் பற்றி பல பரபரப்பு புகார்களை கூறினார் ரவி மோகன். குறிப்பாக தன்னை சுதந்திரமாக செயல்படவில்லை, வங்கி கணக்கு கூட தனது பெயரில் இல்லை, செலவுக்கு கூட பணம் கொடுப்பதில்லை என்றெல்லாம் அடுக்கடுக்கான புகார்களை கூறினார்..

மேலும் என் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதால் கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன்.. இந்த பிரச்சனை எல்லாம் தீரும்வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். இந்நிலையில், இன்று ஒரு திரைப்பட விழாவில் பேசிய ரவி மோகன் ‘தனிப்பட்ட வாழ்க்கையும்.. சினிமா வாழ்க்கையும் வேறு வேறு.. நான் கொஞ்சம் எமோஷனலாகி விட்டேன்.. நீங்கள் கொடுத்த அன்பின் நான் மீண்டுவிட்டேன்.

சினிமா துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் ‘சினிமாவில் நடிக்க மாட்டேன் என்பதை மட்டும் சொல்லக்கூடாது’ என சொன்னார்கள். அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன். ரசிகர்களுக்கு நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன்.. திரும்பி வருவேன்.. திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.. அந்த நம்பிக்கை கொடுத்தவர்களுக்கு நன்றி’ எனக் கூறியிருக்கிறார்.