Paristamil Navigation Paristamil advert login

மரின் லூப்பன் - தகுதி நீக்க தண்டனை இருந்தும் ஏன் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

மரின் லூப்பன் - தகுதி நீக்க தண்டனை இருந்தும் ஏன் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

7 ஆடி 2026 செவ்வாய் 19:12 | பார்வைகள் : 1716


ஜூலை 7, 2026 அன்று , மரின் லூப்பனிற்கு கையில் பாதுகாப்பு தண்டனை வளையத்துடன் 1 ஆண்டு சிறை ( bracelet électronique) வழங்கப்பட்டது

15 மாதங்கள் “திடமான” தகுதி நீக்கம் (inéligibilité ferme)

மொத்தம் 40 மாதங்கள் தகுதி நீக்கம் (இதில் 30 மாதங்கள் நிபந்தனையுடன் / sursis)

100,000 € அபராதம்

என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தண்டனைகள் இருந்தும்,

அவர் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்டப்படி தகுதியுள்ளவர்.


ஏன் போட்டியிட முடிகிறது? — சட்ட விளக்கம்

தகுதி நீக்க தண்டனை ஏற்கனவே “நிறைவேற்றப்பட்டதாக” நீதிமன்றம் கருதியுள்ளது

முதல் நிலை விசாரணையில் Marine Le Pen‑க்கு 5 ஆண்டுகள் தகுதி நீக்கம்

உடனடி அமலாக்கம், அதாவது 31 மார்ச் 2025 முதல் தண்டனை நடைமுறையில் இருந்தது எனக் கருத்ப்பட்டுள்ளது.


மேல் நீதிமன்றம்,

“31 மார்ச் 2025 முதல் தகுதி நீக்க தண்டனை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது;
இதனால் ‘நேர்மை / probité’ மீதான பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.


— நீதிமன்றத் தலைவர் Michèle Agi

தண்டனை ஏற்கனவே நடைமுறையில் இருந்த காலமாக  கணக்கிடப்பட்டுள்ளது

புதிய தண்டனை கூடுதல் தடையாக கருதப்படவில்லை

எனவே 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்டத் தடையில்லை

எனத் தெரிவித்துள்ளார்


“வேட்பாளர் சுதந்திரம்” மற்றும் “வாக்காளர் சுதந்திரம்” என்பவற்றை கருத்தில் கொண்டது

வேட்பாளராக நிற்கும் சுதந்திரம்

வாக்காளர்களின் சுதந்திரமான தேர்வு

ஜனநாயக வெளிப்பாட்டின் அடிப்படை நிபந்தனை
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு

தகுதி நீக்க தண்டனையை, அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் விளக்கியுள்ளது.

இது மரின் லூப்பனை போட்டியிலிருந்து நீக்க முயற்சி செய்த உச்ச அரசியல் தலைமைகளிற்கு இடையூறாக அமைந்துள்ளது.