Paristamil Navigation Paristamil advert login

ஈரானை கடுமையாக விமர்சித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஈரானை கடுமையாக விமர்சித்த ஐக்கிய அரபு அமீரகம்

8 ஆடி 2026 புதன் 12:28 | பார்வைகள் : 1026


மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானை ஐக்கிய அரபு அமீரகம் விமர்சித்துள்ளது.

சர்வதேச நீர்வழிப் பாதையில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா நேற்று இரவு 80க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானும் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் தற்போது மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறிய ஈரானின் செயலை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல்-நஹ்யானின் மூத்த ராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷ் புதன்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஈரானின் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நீடிப்பதை விரும்பவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாட்டுக்கு சொந்தமான வணிக கப்பல்களை குறிவைத்து நடத்திய தாக்குதல், பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல் என பட்டியலிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் ஈரான் போர் மனநிலையில் இருந்து விடுபடவில்லை என்றும், பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளுக்கு ஈரான் உறுதியளிக்கவும் தயாராக இல்லை என்று கர்காஷ் குறிப்பிட்டுள்ளார்.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3