பிரான்ஸ்–மொராக்கோ போட்டியை முன்னிட்டு மெட்ரோ சேவைகள் பாதிப்பு!!
8 ஆடி 2026 புதன் 13:11 | பார்வைகள் : 5842
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் ஜூலை 9, வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மோதவுள்ளன. இந்தப் போட்டியை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரிஸில் இரவு 9 மணி முதல் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக, பரிஸில் பல மெட்ரோ சேவைகள் பாதிக்கப்படும். குறிப்பாக 6ஆம் வழித்தடத்தில் Charles de Gaulle–Étoile மற்றும் Trocadéro நிலையங்களுக்கு இடையிலான சேவை முழுமையாக நிறுத்தப்படும். மேலும் 1, 2, 8, 9, 12 மற்றும் 14ஆம் வழித்தடங்களில் உள்ள Charles de Gaulle–Étoile, Argentine, George V, Madeleine, Miromesnil, Ternes ஆகிய நிலையங்களில் தொடருந்துகள் நிற்காது. இதனால் Champs-Élysées பகுதியை பொதுப் போக்குவரத்தின் மூலம் அணுகுவது சிரமமாக இருக்கும்.
பரிஸ் காவல்துறை, பொதுச் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகக் கருதி, ஜூலை 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜெரிகேன்களில் எரிபொருள் எடுத்துச் செல்வதைத் தடை செய்துள்ளது. அதேபோல், ஜூலை 13 முதல் 15 வரை பட்டாசுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு வெடிபொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 2022ஆம் ஆண்டு பிரான்ஸ்–மொராக்கோ அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு பரிஸில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து எடுக்கப்பட்டவை. அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் Champs-Élysées பகுதியில் திரண்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire