Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்பம் காரணமாக, SNCF தொடருந்துகள் சனிக்கிழமை வரை ரத்து!!

கடும் வெப்பம் காரணமாக, SNCF தொடருந்துகள் சனிக்கிழமை வரை ரத்து!!

9 ஆடி 2026 வியாழன் 17:02 | பார்வைகள் : 274


இந்த அதிவேக வழித்தடம் கடந்து செல்லும் அனைத்து மாவட்டங்களும், இன்று Météo France செம்மஞ்சள் வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டன.

கடும் வெப்பம் காரணமாக, Paris-Orléans-Limoges-Toulouse (POLT) வழித்தடத்தில் இயக்கப்படும் ஏழு அதிவேக தொடருந்துகளை, குறைந்தபட்சம் சனிக்கிழமை வரை SNCF நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதற்கு முந்தைய வெப்ப அலைகளின் போதும் அந்நிறுவனம் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

பல தொடருந்துகள் குளிரூட்டும் கருவிகளில் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால், இது பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்று SNCF நிறுவனம் விளக்கியுள்ளது. மேலும், வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் விரிவடையக்கூடும். இந்த நடவடிக்கை உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் விளக்கியுள்ளது.

இந்த ரத்துகளால் பாதிக்கப்பட்ட பயணிகள், தங்களது பயணச்சீட்டுகளை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என SNCF உறுதியளிக்கிறது. Météo France தகவலின்படி, வியாழக்கிழமையன்று மொத்தம் 72 மாவட்டங்கள் செம்மஞ்சள் வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் உள்ளன. POLT வழித்தடம் சேவை வழங்கும் அனைத்து மாவட்டங்களும் இந்த எச்சரிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.