Paristamil Navigation Paristamil advert login

மின்சாரம், எரிவாயு ஊழியர்களின் சலுகை குறைப்புக்கு CGT கடும் எதிர்ப்பு!!

மின்சாரம், எரிவாயு ஊழியர்களின் சலுகை குறைப்புக்கு CGT கடும் எதிர்ப்பு!!

10 ஆடி 2026 வெள்ளி 22:56 | பார்வைகள் : 1864


அரசு, மின்சாரம் மற்றும் எரிவாயு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும் "Tarif Agent" என்ற சிறப்பு கட்டணச் சலுகையை குறைக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. இந்தச் சலுகை 1946 முதல் நடைமுறையில் உள்ளது.

அரசின் விளக்கப்படி, Cour des comptes (கணக்காய்வாளர் நீதிமன்றம்) இந்தச் சலுகையின் மதிப்பை எரிசக்தியின் உண்மையான விலைக்கு ஏற்ப மறுமதிப்பீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய அமைச்சரவை ஆணை மூலம் முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு CGT தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மின்சாரம் மற்றும் எரிவாயு துறையின் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கை என்று அந்தச் சங்கம் கூறியுள்ளது.

"Tarif Agent" சலுகையின் மூலம், ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் குடும்பத்தின் அளவு மற்றும் வீட்டின் வெப்பமூட்டும் முறையைப் பொறுத்து மின்சாரம், எரிவாயு கட்டணத்தில் தள்ளுபடி பெறுகின்றனர். இந்தச் சலுகை தற்போது அரசின் மறுஆய்வில் உள்ளது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்